Tuesday, November 24, 2015

கரு நாகத்தின் பலவீனம் -2

நானும் வெலவெலத்துப் போனேன்

சினிமாவில் பார்ப்பது என்பது வேறு,பாம்பாட்டியின்அருகில்பாதுகாப்புடன் இருந்து பார்ப்பது என்பது வேறுஅல்லதுஅவசர கதியில் எங்காவது
போய்க்கொண்டிருக்கும்போது பார்ப்பது என்பது வேறு.

ஆனாலஇப்படி வீட்டு வாசலில்முழுவீட்டையும் ஆக்கிரமித்து மிரட்டுகிற மாதிரிபடமெடுத்துப் பார்க்க ஏற்பட்ட பாதிப்பில் இருந்து
என்னால் வெகு நேரம் மீளவே முடியவில்லை

வாசல் விளக்கைப் போட்டபடி அதனுடையைநகர்வை தெரிந்து கொள்வோம் என நானும்அரை மணி நேரத்திற்கு மேலாக வாசல் வராண்டாவில்
அமர்ந்திருக்க அதுவும் அதற்குரிய இடத்தில்இருப்பதானதோரணையில்
 அலட்சியமாக அமர்ந்திருந்தது

 எங்களுக்கு அதனால் ஏற்படும் பாதிப்புஎன்பதைவிட எங்கள் வீடு தேடி இப்போது யாரும்வந்துவிடக் கூடாதே என்கிற பயமே அதிகம் இருந்தது
அதனால் மாடிக்கு என் மனைவியை அனுப்பிஎங்கள் வீட்டுக்கு அடுத்திருந்த திருப்பத்தில் யார்வந்தாலும் எச்சரிக்கை செய்யும்படி அனுப்பிவைத்தேன்

நல்லவேளை யாரும் வரவில்லை.நாகமும் பின்சர்வ சாதாரண்மாக இறங்கி வழக்கம்போல் செல்லும்பொந்தின் பக்கம் நகரத் துவங்கியது.

என்னால் இரவுமுழுவதும் தூங்க் முடியவில்லை

நானும் கிராமத்தில் வளர்ந்தவன் என்பதால்பாம்பு குறித்து எனக்குஅதீத பயம் கிடையாதுஆயினும் எதிர்பாராது அதன் அருகில் யாரும்
வர நேர்ந்தால தன்னை தற்காத்துக் கொள்ளும்நோக்கில்நிச்சயம் தீண்டிவிடும் என்பதில்எனக்கு எவ்வித சந்தேகமும்    இல்லை.

மனிதர்கள் இயல்பாகப் புழங்குகிறபகுதியில்எப்போது எது நேரம் என உறுதி சொல்ல முடியாதுஎன்பதால் நிச்சயம் இதற்கு ஒருமுடிவுசெய்யவேண்டும்என முடிவெடுத்து இரவுஎப்போதோ என்னை அறியாதுஉறங்கிபோனேன்

மறு நாள் எழுந்து முதல் வேலையாக அக்கம் பக்கம்வீட்டில் உள்ளவர்களிடம் இதுவிவரம் தெரிவித்துஎன்ன செய்யலாம் இப்படியே தொடர்வதில் உள்ள
ஆபத்தை விளக்கி அதனை அடித்துக் கொல்லலாம் எனமுடிவு செய்தோம்

ஆயினும் அதிலும் இரண்டு சிக்கல் இருந்தது

என் வீட்டிலும் அடுத்திருந்த வீட்டில்இருந்த பெண்களும்நாகத்தை அடித்துக் கொல்வதுபாவம் என்றும்அதற்கு உறுதியாய்சம்மதிக்கமாட்டோம் என்றும் யாராவதுபாம்பாட்டியை அழைத்துவந்துபிடித்துப் போகத்தான்
செய்யவேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார்கள்

இரண்டாவது அதனுடைய ஆகிருதியைநேரடியாகப்பார்த்தவர்கள் நிச்சயம் அதனை  அடிக்கத் தயங்கத்தான் செய்வார்கள்.
மேலும் அதுமிகச்சுதாரிப்பாக காம்பௌண்ட் சுவரை ஒட்டியே
மிகக் கவனமாகச்செல்வதால் மிகச் சரியாகஒரு அடியில்கவனித்து அடித்தால் ஒழியஅதனை அடித்துக்கொல்வது என்பது நிச்சயம்
 சாத்தியமில்லை.

ஒருவேளை அடிக்க முயன்றுதவறிப்போனால் அதற்கும் நமக்கும் உள்ள
சுமுக உறவில்ஏற்படுத்தும் பாதிப்பை தாங்கிக்கொள்கிற தைரியம் எங்களில் எவருக்கும் இல்லை.

என்வே முடிவாக எங்கள் நகருக்குஅருகில் உள்ளகிராமத்திற்குச் சென்று பாம்பு பிடிக்கிறவரை அழைத்துவந்து பிடித்துக் கொண்டுபோகச் சொல்வது என ஏக மனதாக முடிவெடுத்தோம்

அது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமாக இல்லை

(தொடரும் )

2 comments:

  1. பாம்பை கண்டால் படையும் நடுங்கும் நாம் நடுங்க மாட்டோமா

    ReplyDelete
    Replies
    1. அதுவும் ஆறடி கரு நாகம் எனில்...
      நேரடியாக வீட்டு வாசல் எனில்..

      Delete