Monday, November 30, 2015

கரு நாகத்தின் பலவீனம் -5

நம் வாழ்வில் எவ்வித மாறுதலும் இல்லாமல்நிகழ்வுகளும் செல்லுகிற வரையில் எவ்விதபிரச்சனையும் இல்லை

நாம் பாதுகாப்பு வலையத்தினுள் மிகச்சரியாகவும்அதிகச் சுகமாகவும் மிக பொருந்தி இருப்பதாக எண்ணி நாட்களைக்
கடத்திக் கொண்டிருக்கிறோம்

அதே சமயம் புதியதாகவும் நம் அன்றாடநிகழ்வுகளில் ஒரு தடை ஏற்படுத்துவதாக்வும்ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடக்குமாயின் அதிர்ச்சி
அடைவதோடு குழம்பியும் போய் அந்தக் குழப்பத்திற்கு பிரச்சனை எனப் பெயரிட்டுதிகைத்து நிற்கிறோம்

இதனைத்தான்கரு நாகத்தின் பலவீனத்தின்முதல் பதிவாகப் போட்டிருந்தேன்அனைவரின் கவனமும் பிரச்சனையில்முழுவதுமாக இருக்கும்படியாக பதிவைமிக கவனமாக எழுதி இருந்தேன்
பின்னூட்டங்களும் அதையே பிரதிபலித்தன.

வேடிக்கைப் பார்த்துக் கொண்டோ அல்லதுஅதனுடன் இருந்து கொண்டே எப்போதும் போலஇயல்பாக இருக்க முடிகிற பிரச்சனைகள் குறித்து
நாம் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை.

மாறாக அதனைத தீர்க்காவிடில்நம் அன்றாட வாழ்வில் அதிகப் பாதிப்பு
ஏற்படும் எனில் அப்போதுதான்அதனைத்தான் உடனடியாக தீர்க்க முயல்கிறோம்

முதல் நிலையாக நமக்குத் தெரிந்த விஷயங்கள்மூலம் முயல்கிறோம்..அது சரிப்பட்டுவரவில்லையெனில் அது குறித்துஅனுபவஸ்தர்களின் பெற முயல்கிறோம்.பின் சாத்தியமானதும்உடனடியாக ஆகக் கூடியதாகவும் உள்ளஒரு தீர்வைத் தேர்ந்தெடுத்து செயல் படமுடிவெடுக்கிறோம்

இதைத்தான் இரண்டாம் பதிவாகப் போட்டிருந்தேன்பின்னூட்டங்களிலும் இதன் பிரதிபலிப்புமிகச் சரியாக இருந்தது

பிரச்சனையை அங்குதான் தீர்க்கவேண்டும்என்றாலும் கூடஅதற்கான தீர்வு அங்குதான்இருக்கவேண்டும் என்பதில்லைவிக்கிரமாதித்தன் கதைகளிலோ அல்லதுபிற மந்திர வாதிக்கதைகளிலோஅரக்கனின் உயிர் அவனிடத்து இல்லாதுவேறு எங்கோஒளித்துவைக்கப் பட்டிருப்பதைப்போல
 தீர்வுகளும் வேறு எங்கோ இருக்கலாம்இதனை அறிய ஏற்கெனவே இதுபோல்
இதுவிஷயத்தில் அனுபவப்பட்டவர்களைத்தேடிச் செல்வதே
புத்திசாலித் தனம்

நமக்கு இமாலயப் பிரச்சனையாகத்தெரிகிற பிரச்சனைஅவர்களுக்கு கூழாங்கல்லைப்போலக் கூட எளியதாக இருக்கலாம் .
இதனை வலியுறுத்தும் விதமாகவேபாம்புப் பிடிக்கும் ஊரைத் தேடிப்
போவதையும் அவர்கள் மிக எளிதானஒரு தீர்வு சொன்னதையும் பதிவாகப்போட்டிருந்தேன்'

முதல் பதிவில் பிரச்சனைகளின் தாக்கத்தில் மட்டுமேஇருந்தவர்கள் இரண்டாவதாக அடுத்து என்னஎனத் தொடர்ந்தவர்கள் மூன்றாவதான அந்தப் பலவீனம் என்ன எனஅறிந்து கொள்வதிலேயேஅதிகம்ஆர்வம் காட்டினார்களே ஒழிய பிரச்சனையில்முன் போல அதிகக் கவனம் கொள்ளவில்லை.

நான்காவதாக பிரச்சனையை அனுபவஸ்தர்களின்அறிவுறுத்தலோடு அல்லது அவர்களின் துணையோடுதீர்ப்பது குறித்து எழுதி இருந்தேன்
அனுபவஸ்தர்களாக இருந்தாலும் பிரச்சனையைமுதல் தடவை சந்திக்கிற அதே மனோபாவத்தில்பிரச்சனையை அணுகவேண்டியஅவசியம் குறித்து சரியாகப் புரிந்து கொள்ளவேபெரியவர் சூழலை ஆராய்வது தன் கைகளைத் துணியால்கட்டிக் கொள்வது செங்கல்லைத் தேர்ந்தெடுப்பது என
நுட்பமான விஷயங்களாகப் பதிவு செய்திருந்தேன்

பாம்புப் பிரச்சனை மட்டுமில்லை.எந்தப் பகாசுரப்பிரச்சனையாக இருந்தாலும் நிச்சயமாக அதற்கெனநிச்சயமாகஒரு தீர்வு உண்டு.ஒருவேளை இப்பதிவில்குறிப்பிட்டிருப்பதைப் போல அந்தப் பிரச்சனைக்கு
மிகப் பெரிய பலவீனமான பக்கம் இருக்கவும் நிச்சயம்அதிகச் சாத்தியம் உண்டு எனபதற்காகவேதலைப்பைக் கூட க் கரு நாகத்தின் பல்வீனம்
எனக் குறிப்பிட்டிருந்தேன்

இது நடந்த நிகழ்வுதான்.என்வேதான் இயல்பாகஎழுத முடிந்தது.ஆயினும் இது வெறும் நிகழ்வாகவும்கதை போலவும் மட்டும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக்வேஇத்தனை பகுதிகளாகப் பிரித்து இதனை எழுதினேன்

இதனை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு சிலர்பின்னூட்டமிட்டிருந்தது மனதிற்கு நிறைவாக இருந்ததுஅவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி

No comments:

Post a Comment