Friday, November 27, 2015

கரு நாகத்தின் பலவீனம் -3

ஒரு வழியாக பாம்பை அடிக்கக்கூடாது எனவும்பாம்பாட்டியை அழைத்து பிடித்துப் போவது எனமுடிவு செய்தவுடன் உடன் அதற்கான
தகவலகளைவிசாரிக்கத் துவங்கினேன்

இப்போது என்றால் பாம்பு பிடிப்பவரின் செல் நம்பர்கூட டைரக்டரியிலேயே கிடைக்கிறது.முன்பெல்லாம்அப்படி இல்லை.அவர்களைத் தேடி அவர்கள் இருக்கும்கிராமத்திற்குத்தான் போகவேண்டும்

அதன்படி எனது நிர்வாகக் கட்டுப்பாட்டில்இருந்த ஒரு கிராமத்தில் பாம்பு பிடிக்கிறவர்கள்அதிகம் இருப்பார்கள் எனக் கேள்விப்பட்டு அங்கு போய்
விசாரிக்கத் துவங்கினேன்.

அங்கு போய் விசாரிக்கையில்தான் பாம்பு பிடித்துஅதன் தோலை உரித்து விற்று அதைஒரு தொழிலாக செய்து கொண்டிருந்தவர்கள் எல்லாம்
அதிகாரிகள் அடிக்கடி வந்து பாம்பு பிடிக்கத்தடை உள்ளதாகச் சொல்லி ரெய்ட் வந்துபாம்புத் தோலை பறிமுதல் செய்து போவதோடு
அல்லாமல் கேஸும் பதிவு செய்வதால்வெறுப்படைந்து  போய் பாம்பு பிடிக்கும் தொழிலையேவிட்டு விட்டு சித்தாள் வேலைக்கும்
 நிமிந்தாள் வேலைக்கும் போய்க்கொண்டிருப்பதாகச்சொன்னார்கள்

பின் அந்த கிராமத் தலைவரிடம் என் நிலைமையைச்சொல்லி எப்படியாவது  கொஞ்சம் தெளிவானஒருவரை மட்டும்எனக்காக அனுப்பிவைக்கும்படிகேட்டுக் கொள்ளஅவர் உடன் ஊருக்குள்
தகவல் சொல்லி ஒரு பெரியவரை அழைத்துவந்துஎன் முன் நிறுத்தினார்

அவர் முழுக் கதையையும் கேட்டுவிட்டு "இதற்குப் போயா இத்தனை தூரம் வந்தீர்கள்இப்படிச் செய்தால் போதுமே .அந்தக் கரு நாகம்அத்தோடு மண்ணாகிப் போகுமே " எனநான் செய்ய வேண்டியதைச் சொல்ல
 எனக்கே ப்.பூ.. கரு நாகத்தின் பலம்அவ்வளவுதானாஎனப் பட்டது

பாக்கியராஜ் அவர்கள் டார்லிங் டார்லிங் படத்தில்இறுதிக் காட்சியில் மனம் வெறுத்துப் போய்தற்கொலை செய்து கொள்வதற்காக மலை உச்சிக்கு
விரைந்து கொண்டிருப்பார்..அவர் காதலிஅவரைத் தடுத்து நிறுத்த தொடர்ந்துகத்திக் கொண்டே வர இவர் அதனைக் கண்டு
கொள்ளாது மலை உச்சிக்கே வந்து நின்றுகுதிக்கப் போகிற பாவனையில்
முகத்தில் ஒரு உணர்ச்சிக் குவியலைக் காட்டுவார்

அதில் அந்த மலையின் அதல பாதாளமேஅவர் முகத்தில் பிரதிபலிப்பதாகத் தெரியும்நாமும் அதிர்ந்து போய் இருக்கையின் நுனிக்கே
வந்து விடுவோம்.அடுத்த காட்சியில்மலைச் சரிவுக்கு பதிலாக அவருக்கு முன்னே அகலமான அழகான தார்ச் சாலையும் அதில்
காரும் பஸ்ஸும் போய்க்கொண்டிருக்கும்

நம்மையும் அறியாது நாமும் அவரின் காதலியோடுசிரிக்கத் துவங்கிவிடுவோம்

அந்தப் பெரியவர் அந்த கரு நாகத்தைக்கொல்வதற்குச் சொன்னவழியைக் கேட்டதும்எனக்குள் ஏனோ இந்தக் காட்சிதான்உடன் நினைவுக்கு வந்துபோனது

(தொடரும் )

2 comments:

  1. நல்ல இடத்தில் நிறுத்தி விட்டீர்களே...!

    ReplyDelete