Tuesday, November 10, 2015

சனி பிடித்தல்

சனி பிடித்தல் குறித்து கேள்விப் பட்டிருக்கிறீர்களா ?அது யாரையும் நேரடியாக இஷ்டப்படியெல்லாம் பிடிக்க முடியாதாம்

பிடிக்கவேண்டிய காலமானலும் கூடஆசார அனுஷ்டான பிசகை எதிர்பார்த்துஅப்படிப் பிசகிய இடம் மூலம்தான்
பிடிக்க வேண்டியவரைப் மிகச் சரியாகப்பிடிக்குமாம்

நீங்கள் கூட கேள்விப் பட்டிருக்கலாம் தன்புறங்காலைமிகச் சரியாக கழுவாத ராஜாவை அந்தமுழங்கால் மூலம் சனிபிடித்த  கதையை

எனக்கும் தங்களைப் போலவே இதிலெல்லாம்சுத்தமாக நம்பிக்கை இல்லை ஆனாலும்என் கண் முன்னால் நடந்த ஒரு விஷயம்
இதனை நம்பித் தொலைக்கும்படி செய்துவிட்டது

மதுரையில் எங்கள் வீடு அந்தக் காலனியில் பஸ் ஸ்டாப்பை ஒட்டி அமைந்திருந்ததுஎங்கள் வீட்டின் முன் அமைந்திருந்த வேம்பும்
நான் அடுத்தவர்கள் அமரட்டும் என வாசலில்போட்டிருந்த சிமெண்ட் பெஞ்சும் அந்தக் காலனியில் வெகு பிரசித்தம்

காலையில் கல்லூரி மற்றும் அலுவலகத்திற்குச்செல்லும் பெண்கள் எப்போதும் குறைந்ததுஅரை மணிநேரத்திற்குமுன்பாக வருவதும்
எங்கள் வீட்டு சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்துஹோம் ஒர்க் செய்வது
அல்லது அரட்டை அடிப்பதுஎன்பது எல்லோருக்கும்
பழகிப் போன ஒன்று

என் மனைவியும் எல்லோரிட்மும்அனுசரனையாக பேசுவதும்
நான் தேவையில்லாமல் பெரிய மனிதப் போர்வையில்
அவர்களது பேச்சில் கலந்து குழப்பாமலும் இருப்பதும்
அவர்களுக்கும் பிடித்துப் போனதால்எங்கள் வீட்டு வாசல் எப்போதும் கலகலப்பாய் இருக்கும்

என் மனைவிக்கு கல்லூரி   மற்றும் அலுவலகம்செல்கிற எல்லோரையும் தனிப்பட்ட முறையில்மிக நன்றாகத் தெரியும்
யார் யார் எந்த பஸ்ஸுக்குப் போவார்கள் யார் யார்இன்று விடுமுறை என்பதெல்லாம் கூடஎன் மனைவிக்கு அத்துப் படி
என் மனைவி மூலம் எனக்கும் அத்துப் படி

இப்படித்தான் ஒரு நாள் நான் வீட்டுத் தோட்டத்தில்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கஎன் மனைவி வாசலில் கல்லூரிக்குச் செல்லும்
பெண்களுடன் பேசிக் கொண்டிருக்கையில்பஸ் வருகிற சப்தம் கேட்டது
அவசரம் அவசரமாக எல்லோரும் எழுந்து ஓடினார்கள்
.பி.ஏ,எகனாமிக்ஸ் புவனாவும் எழுந்து வேகமாக ஓடினாள்

அவள் போகிற அவசரத்தில் கையில் இருந்தகைக் குட்டையை தவறவிட்டுப் போனதைநான் பார்த்தேன் .சரி எடுத்து வைத்துக் கொடுக்கலாம்
என நினைத்து நான் வாளியை வைத்துவிட்டுவாசலுக்கு வரும் முன்
காலை எட்டு மணிக்கே பஸ் பிடித்துப் போகும்பொறியியல் கல்லூரி மாணவன் பிரபாகரன்அதைக் கையில் எடுத்துவிட்டான்,
அதை எடுத்தவன்எங்களைக் கவனிக்காமல்சுற்று முற்றும் பார்த்துவிட்டு
சட்டைக்குள் போட்டுக் கொண்டான்.
அது எனக்கே ஆச்சரியமாக இருந்தது

அவன் டென்த் படிக்கிற காலங்க்ளில் இருந்துஇந்த ஸ்டாப்பில்தான் பஸ் ஏறுகிறான்.அவனுடைய பேச்சு நடவடிக்கை எல்லாமே
மிக நாகரீகமாக இருக்கும்ஒரு சாயலில் என் மகன் வயிற்றுப் பேரனின்
சாயலில் இருப்பதால் என மனைவிக்கு அவன்மீதுதனியானஅக்கறை.
விஷேச நாட்களில் ஏதேனும்தின்பண்டங்கள் இருந்தாலும் வாங்க மறுப்பான்
என்பதால் நாசூக்காக பிரசாதம் எனச் சொல்லிக்கொடுக்க முனைவாள்
அப்படிப்பட்டவனின் இந்தச் செய்கைஎனக்கு ஒருமாதிரி வித்தியாசமாகப் பட்டது.சரி பருவக் கோளாறு எனஅதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டேன்

மறு நாள் காலையில் எப்போதும் எட்டு மணிபஸ்ஸுக்கே போகும் பிரபாகரன் இன்றும் தாமதமாகஒன்பது மணிக்கு வந்து வாசலில் நின்றிருந்தான்பெண்கள் ஒவ்வொருவராக வர வர யாரையோ
எதிர்பார்ப்பவன் போல காலனிப் பக்கமே பார்த்தபடிநின்று கொண்டிருந்தான். தூரத்தில் புவனாவருவது தெரிந்ததும்மிக வேகமாக அவளை நோக்கிநடக்க ஆரம்பித்தான்

எனக்குள் சுவாரஸ்யம் தொற்றிக் கொண்டது

நானும் அவசரம் அவசரமாக மாடிக்குப் போய்அவர்களைக் கவனிக்கத் துவங்கினேன்.நேராகபுவனாவிடம்சென்றவன்கொஞ்சம்பணிவாகக் குனிந்து என்னவோசொன்னபடிகைக்குட்டையைக் கொடுத்தான்.
அவளும் அதை மரியாதை நிமித்தம் சிரித்தபடி வாங்கி நன்றி சொல்வதுபோல் பட்டது

பின் பஸ் ஸ்டாப் வரை பிரபாகரன் என்னவோபேசிக் கொண்டேவந்தான்.
 சுய அறிமுகமாக இருக்கலாம்அவளும் மரியாதை நிமித்தம் தலையாட்டிக்
கொண்டே வருவதுதெரிந்தது
.
பின்சிறிதுநேரத்தில்பஸ்வரவும் புவனா பஸ்ஸில்ஏறிக்கொண்டாள்.
பிரபாகரனும் அதில் ஏறிக் கொண்டான்

அது பிரபாகரன் போக வேண்டிய பஸ் இல்லை

அப்புறம் பல நாட்கள் பிரபாகரன் அவன் போகவேண்டியஎட்டரை மணி பஸ்ஸில் போகவே இல்லைஎப்போதும் இந்த ஒன்பது மணி பஸ்ஸுக்குத்தான் வந்தான்மாலை கூட அவன் கல்லூரி மாணவர்கள் எல்லாம்
நாலு மணி பஸ்ஸில் வந்தால் இவன் தாமதமாகஅந்தக் கல்லூரிப் பெண்கள் வருகிற நேரத்தைஅனுசரித்து வரத் துவங்கினான்.

சில சமயம்சனிக்கிழமைகளில் புவனா மட்டும் கல்லூரி போவாள்
என் மனைவி கேட்டபோது ஸ்பெஷல் கிளாஸ் என்றாள்சொல்லி வைத்த்தைப் போல பிரபாகரனும் அன்றுஅதே பஸ்ஸில் கல்லூரி போய்க்கொண்டிருந்தான்
இப்படியே ஓராண்டு முடிந்தது

கோடை விடுமுறையில் ஒரு நாள் புவனா பெட்டிபடுக்கைககள் சகிதம் பஸ் ஸ்டாப் வந்திருந்தாள்உடன் அவளுடைய அக்காவும் அவருடைய கணவனும்
நின்றிருந்தார்கள்.

என் மனைவி புவனவைப் பார்த்து
 "லீவுக்கு ஊருக்கா " என்றாள்

புவனா அருகில் வந்து "இல்லை ஆண்டி வீட்டில்எல்லோரும் மாஸ்டா டிகிரியை சென்னையில் செய்யச்சொல்கிறார்கள் அப்போதுதான் எக்ஸ்போஸர்நன்றாக இருக்கும் என்கிறார்கள்.
எனக்கு இந்த ஊர் விட்டுப் போகமனமே இல்லை " என்றாள்
அவள் முகம் வாட்டமாக இருந்தது

அப்புறம் பஸ் வந்ததும் அவர்கள் ஏறிப் போவிட்டார்கள்

அடுத்த ஆண்டு கல்லூரி திறந்த நாளில் இருந்துஎங்கள் பஸ் ஸ்டாப் மீண்டும்
களைகட்ட ஆரம்பித்துவிட்டதுபல புதிய முகங்களுடன் பழைய முகங்களும் சேரபஸ் ஸ்டாப்பே ஒரு நந்தவனம் போல இருந்தது

எல்லோருடைய முகங்களிலும்சந்தோஷச் சாயலைப் பார்க்க
எங்களுக்கும் மிக பூரிப்பாய் இருந்தது

அந்தக் கூட்டத்தில் பிரபாகரன் மட்டும்வித்தியாசமாக இருந்தான்
பழைய கல கலப்பில்லை.அவன் மெலிந்து வாடிப் போய் இருந்ததும்
தாடி மீசையும் அவனைத் தனித்துக் காட்டியது

உண்மையில் எனக்கும் என் மனைவிக்கும்அவனைப் பார்க்கையில் மனம் என்னவோ செய்தது.எப்படியாவது ஆறுதல் சொல்லிஅவனை பழைய நிலைக்குக் கொண்டுவரலாம்என நினைத்தோம்.

ஆனால் மிகச் சாமர்த்தியமாகமறுபுறம் உள்ள மர நிழலில் நிற்பதைப் போல நின்றுஅல்லது மிகச் சரியான நேரத்திற்கு வருவதைப்
போல வந்து பஸ் ஏறி எங்க்களை தவிர்த்தான்

எங்களுக்கு அவன் செயல்கள் மிகுந்த வேதனை அளித்தது
அவன் இவ்வாறு நடந்து கொள்வதன் சரியான காரணத்தைத்
தெரிந்து கொண்டு அவனுடன் பேச முயல்வோம்எனஅவன் இல்லாத நேரத்தில்அவன் நண்பன் கார்த்திக்கிடம் விசாரித்தோம்

அவன் சுருக்கமாக "போன வருடத்தில் கொஞ்சம்டைவர்ட் ஆகிவிட்டான் ஆண்டி.யார் சொல்லியும் கேட்கவில்லை

முதல் இரண்டு வருடம் அவன்தான் எங்கள் வகுப்பில்முதல் மாணவன்
போன வருடம் சரியாகவகுப்புக்கு வரவில்லை.அரியஸ் விழுந்துவிட்டது
இந்த வருடமும் அப்படித்தான் இருக்கிறான்.வருடம் முடிப்பான்
கோர்ஸ் முடிப்பது கஷ்டம் "என்றான்

இவன் உறுதியாக காதல் விவகாரத்தில்தான்
திசை தவறி இருப்பான்என நாங்கள் நினைத்துக் கொண்டோம்

.மகா நதி சினிமாவில்கமலும் அவரது குடும்பமும்கௌரவமாக மிக சந்தோஷமாக ஊரே மதிக்கும்படி இருக்கும்

ஒரு நாள் தங்கள் முன்னே செல்கின்ற காரைப் பார்த்து"அது நம்முடைய பழைய காரைப் போல இருக்கிறதுஅதை விரட்டிப் பிடிப்பா "என
அவர் மகள் சொல்வாள்கமலும் விரட்டிப் பிடிப்பார்.

அவர்கள் மட்டும்அந்தக் காரைத் தொடர வில்லையெனில்
அவர்கள் வாழ்வில்அத்தனை சீரழவு ஏற்ப்பட்டிருக்க சந்தர்ப்பமே இல்லை

சனி அந்த ஒரு வார்த்தையில்நுழைந்ததைப் போல் பிரபாகரன் வாழ்க்கையில் அந்த தவறிய கைக்குட்டைநுழைந்ததோ என
எனக்குப் பட்டது

உண்மையில் புவனாவும் அவனைக் காதலித்தாளாஅல்லது இவனாக ஒருதலைப் பட்சமாக காதலைவளர்த்துக் கொண்டு அவஸ்தைப் படுகிறானா
என குழப்பமாக இருந்தது

முத்ல் ஒருமாதம்எங்கள் பஸ் ஸ்டாப்பில் வந்து பஸ் ஏறிக்
கொண்டிருந்தவன் அப்புறம் வரவேயில்லை

நண்பர்களிடம் விசாரித்த போது "இந்த ஸ்டாப் வரப்பிடிக்கவில்லை எனச் சொல்லி அடுத்த ஸ்டாப்பில் ஏறுகிறான் " என்றார்கள்

சில நாட்கள் கழித்து விசாரித்த போதுகல்லூரிக்கு சரியாக வருவதில்லை என்றார்கள்

ஊரில் இல்லை என்றார்கள்.

நாங்களும் அவனை மறந்து போனோம்

கதையும் இங்குமுடிந்து போனது

சினிமாவில் தவிர்க்க முடியாமல் சில
வருடங்களுக்கு பின்பு எனக் காட்டுவதைப் போல..

ஐந்து வருடங்க்களுக்கு பின்பு ஒரு நாள்ஒரு வெள்ளிக்கிழமை நாங்கள் பூஜை வேலையாகபிஸியாக இருக்கையில் வாசலில் யாரோ "ஆண்டி "
என அழைப்பது கேட்க வாசலை எட்டிப் பார்த்தேன்

புவனா கைக் குழந்தையுடன் கேட்அருகேநின்றுகொண்டிருந்தாள்.அவசரமாக கதவைத் திறந்து
உள்ளே வரும்படி அழைத்தேன் வெளியில்
நின்றிருந்தவரைக் காட்டி என் கணவர்
என அறிமுகப் படுத்தினாள்

என்  மனைவிக்கு ரொம்ப சந்தோஷம்."வெள்ளிக்கிழமையும் அதுவுமா தம்பதிகள் வீட்டுக்குவந்தது ரொம்ப சந்தோஷம் " எனச் சொல்லி
தாம்பூலம் வைத்துக் கொடுத்து உபசரித்தாள்

 பின் குழந்தையை கையில் வாங்கிக் கொண்டு
குழந்தைக்கு என்ன பேரடி வைத்திருக்கிறாய் "என்றாள்

"பிரபா " என்றாள் புவனா

நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதைப் பார்த்து என்ன நினைத்தாளோ"இவங்க அம்மா பேரு பிரபாவதி

அதுதான் சுருக்கமாக
பிரபா " என்றாள்

4 comments:

  1. காதல் நிணைவுகள் அழிவதில்லை என்று சொல்லலாம் அய்யா

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரியான பின்னூட்டம்
      மிகவும் இரசித்தேன்

      Delete
  2. புவனா ஒரு கேள்விக்குறி ?

    ReplyDelete
    Replies
    1. பின்சேர்க்கை இல்லையெனில்
      நீங்கள் சொல்வது சரியே
      ஆயினும் பிரபாவும் ஒரு கேள்விக்குரியே !

      Delete